திருச்சி மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை முதல் இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு;-
லால்குடி- 4.6
நந்தியாறு அணைக்கட்டு -12.6 புள்ளம்பாடி – 10.6
தேவி மங்கலம் -4.2 சமயபுரம் -3
சிறுகுடி -3.8
வாத்தலை அணைக்கட்டு- 5.2 மணப்பாறை -1.2
பொன்னணி ஆறு அணை – 1
முசிறி 2 தாத்தையங்கார் பேட்டை 6
துவாக்குடி 10.3 கொப்பம்பட்டி ஒன்று
தென்பர நாடு 11. துறையூர் 3. பொன்மலை 6.4 ,
திருச்சி ஏர்போர்ட் -4.1
திருச்சி ஜங்ஷன்- 6.4
திருச்சி டவுன் -6 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 108.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியாக இன்று பகலிலும் மழை பெய்து கொண்டிருப்பதால் திருச்சி மாநகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக பெரும்பாலான சாலைகள் துண்டாடப்பட்டுள்ள நிலையில் மழையினால் அந்த சாலைகள் சேரும் சக அதிகமாக மாறி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

