திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது.
திருச்சி
மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் பணம் வைத்து சூதாடுவதாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட திருச்சி பட்டவர்த்தர் சாலை சங்கர் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் செந்தில் மணி (வயது35), பொன்னகர் செல்வா நகர் பாரதியார் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 71), தில்லை நகர் 5வது தெருவை சேர்ந்த ராமசாமி (68), உறையூர் காவல்காரன் தெருவை சேர்ந்த அறிவழகன் (வயது 43), வயலூர் சாலை இரட்டை வாய்க்கால் இரண்டாவது கிருபை சேர்ந்த ஜான் (வயது 59) உள்ளிட்ட 5பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் பணம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.