Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கடன் தொல்லையால் போட்டோகிராபர் தற்கொலை.

0

'- Advertisement -

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் போட்டோகிராபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி சங்கிலியாண்ட புரம் கோவிந்த கோனார் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் .இவரது மகன் புகழேந்தி (வயது 25). போட்டோகிராபர்.

இவர் தனது தொழிலுக்காக 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதற்கிடையில் இவரது மனைவி சூர்யா தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் புகழேந்தி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார் .இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி சூர்யா அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்ஸன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.