அக்னி சிறகுகள் மற்றும் ஆத்மா மருத்துவமனை சார்பில் இலவச நினைவாற்றல் பயிற்சி முகாம்.அமைச்சர் பொய்யா மொழி கலந்து கொண்டார்.
அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் சென்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஆத்மா மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச நினைவாற்றல் பயிற்சி முகாம் சென்ட் ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் தலைவர் இரா மகேந்திரன். அக்னி சிறகுகள் தொண்டு நிறுவன கௌரவத் தலைவர் வாசிம் ராஜா முன்னிலை வகித்தனர்.
ஜேம்ஸ் மேனிலைப் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை யூஜின் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்கள் பள்ளி தேர்வில் எப்படி தேர்ச்சி பெற வேண்டும் என்று ஊக்கப்படுத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் வேந்தர் ராய் ஃபெர்னான்டோ. ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அலோசியஸ் லெஸ்லி பீட்டர். கல்யாணி கவரிங் நிர்வாக இயக்குனர் மணிகண்டன். அக்னி சிறகுகள் கௌரவத் தலைவர் ஆர் கே ராஜா,எய்ம்ஸ் அக்டாமீ தலைவர். கைலாஷ்நாத். கண்மலை அறக்கட்டளை நிறுவனர் எடிசன். சைன் திருச்சி நிறுவனர் மனோஜ் தர்மர். அக்னி சிறகுகள் கௌரவத் தலைவர்கள் விவேகானந்தன் அணிலா எமிலினா. தேன்கிண்ணம் நிறுவனர் ராஜேஷ் குமார். நிர்மலா டிரஸ் மேக்கர்ஸ் நிர்வாக இயக்குனர் நாகரத்தினம். அக்னி சிறகுகள் இணை இயக்குனர் ஜெயவீரன்.
அக்னி சிறகுகள் இணைச் செயலாளர். பாலசுப்ரமணியன் நன்றி உரையாற்றினார்.