திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனை வாயிலில் வருங்கால வைப்பு நிதி துணை மண்டல அலுவலகம் தொடங்க கோரி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர். ஆர்ப்பாட்டம்
திருச்சி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி முன்பு பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் திவாகர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.
முன்னதாக அமைப்புச் செயலாளர் நாராயணசாமி வரவேற்றார்.
வருங்கால வைப்பு நிதி வாரிய உறுப்பினர் சங்கர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார பல்நோக்கு பணிகளுக்கு நியமிக்கப்பட்ட 29 பேருக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும்,
வருங்கால வைப்பு நிதி துணை மண்டல அலுவலகம் திருச்சியில் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக திறக்க வேண்டும்,திருச்சி இ எஸ் ஐ மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய சங்கத்தின் மாநில பொருளாளர் ராஜாராம், பாரதிய பொது தொழிலாளர் சங்க தலைவர் நாகராஜன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.