Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பியவருக்கு மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு சார்பில் பாராட்டு விழா.

0

'- Advertisement -

 

நாமக்கல் மாவட்டத்தில் 2வது பிரதேச நிலை (Divisional leval) உடற்தகுதி விளையாட்டு சிலம்பம் சாம்பியன்ஷிப் – 2022 போட்டி நடைபெற்றது.

இதில் சேலம், கரூர் , திருச்சி, ஈரோடு , நாமக்கல் போன்ற மாவட்டத்திலிருந்து சுமார் 225 பேருக்கு மேல் கலந்துக் கொண்டார்கள் .

இதில் திருச்சி பொன்மலை சாமி தற்காப்பு கலைக்கூடம் சார்பில் 18 தங்கம், 4 சில்லர், 3 வெண்கலம் பெற்று வந்தவருக்கு , பொன்மலையில் பாராட்டு விழா நடந்தது.

நேற்று மாலை மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில் , தண்ணீர் அமைப்பு நிர்வாகி ஆர்.கே.ராஜா, சாமி தற்காப்பு கலைக்கூடம் ஆசிரியர் துரை.ஜீவானந்தம் முன்னிலையில் நடந்தது.

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று , பதக்கம் வாங்கியவருக்கு திருச்சி மாநகராட்சி 46 வது மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ்
பொன்னாடை போர்த்தி, பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் ஜீ.சஹானா ஸ்ரீ, ஆர்.ஹேமா ஸ்ரீ,
ஹர்சா வர்த்தினி,
தீபிகா, ஜே.சக்தி ஸ்ரீ,
கே.வி பிரபஞ்சன் , மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் ஈஸ்வரன் , சீனிவாசன்,பாலு மற்றும் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.