திருச்சி கருமண்டபத்தில்
ஜவுளிக்கடை பெண் ஊழியர் திடீர் மாயம்.
திருச்சி கருமண்டபம் புது தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி ஞானவள்ளி. இவர்களது மகள் அனுஷ்யா ( வயது இருபத்தி இரண்டு). இவர் கருமண்டபம் பகுதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தாய் ஞானவள்ளி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.