Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல வழக்குகளில் தொடர்புடைய இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது.

0

திருச்சி அரியமங்கலத்தில் பல வழக்குகளில் தொடர்புடைய
இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் சிக்கினர்.

திருச்சி அரியமங்கலம் உக்கடை மலையடிவாரம் ஆட்டுக்கார தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மகன் பாலாஜி. ( வயது 22 ).இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அந்த வாகனம் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து பாலாஜி அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார் .

புகாரின் பேரில் அரியமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார் .

தீவிர கண்காணிப்பை தொடர்ந்து இந்த திருட்டு தொடர்பாக அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்த அப்பாஸ் அலி, சிவகந்தன் ஆகிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் அரியமங்கலம் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.