திருச்சியில் தவறி விழுந்து
மூதாட்டி பரிதாப பலி .
மற்றொரு சம்பவத்தில் முதியவர் சாவு.
திருச்சி தென்னூர் ஒத்தமினார் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத். இவரது மனைவி சூர்யாபிவி (வயது 68). இவர் சம்பவத்தன்று தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் திருச்சி பாலக்கரை கீழபுதூர் மெயின் ரோட்டில் புதுக்கோட்டை மணல்மேல்குடி யைச் சேர்ந்த மணி ராஜா (வயது 60 )என்பவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து பாலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.