திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாநில அளவிலான முதலாவது கொம்போ கராத்தே போட்டி நடைபெற்றது.
போட்டியில் திருச்சி கன்னியாகுமரி, கோயமுத்தூர், சேலம் ராமநாதபுரம் ஆடிட்டர் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிக்கு கராத்தே
சங்க மாநிலத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
இப்போட்டியினை பதிவாளர் குமார், சார் பதிவாளர் கோகிலா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக ஜேம்ஸ் பள்ளி தாளாளர் யூஜின், தலைமையாசிரியர் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கராத்தே சங்க செயலாளர் அசோக்குமார்,
கராத்தே ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.
முடிவில் வெற்றி பெற்ற கராத்தே வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள், கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நடைபெற்ற இப்போட்டியில் கொம்போ கராத்தே சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.