நேற்று நமது முப்படைகளின் தளபதி பிபின் ராவத் “BIMSTEC மாநாட்டில் பேசிய விதம்.. இந்தியா உயிரியல் போரை எதிர்கொள்ள தயாராகிவிட்டது என்று கூறியிருந்தார்
உயிரியல் போரை எதிர்கொள்ள தனி இராணுவ பிரிவை இந்தியா உருவாக்க கூடும் என்று அனைவரும் நினைத்திருந்தனர்.
இப்பொழுது அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணித்துவிட்டார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது.
உயர்ந்த மலைகளின் மீது போர் புரியும் நுணுக்கங்களிள் கைதேர்ந்தவர் பிபின் ராவத்.
குன்னுர் வெலிங்டனில் இராணுவ கல்வி பயின்ற “பிபின் ராவத்’ இன்று அங்கயே தன் உயிரை இழந்திருப்பது வேதனைக்குரிய நிகழ்வு.
ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் இன்று கருப்பு தினம்.
ராணுவ வீரர்களுடன் முப்படை தளபதி தனது மனைவியுடன் பயணித்த ஹெலிகாப்டர் கீழே இறங்கி வெடித்து சிதறுவதை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் எடுத்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.