திருச்சி குமரன் நகரில் ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் அபேஸ் செய்த வாலிபர் கைது.
சென்னை பூந்தமல்லி சீனிவாச நகரைச் சேர்ந்தவர் தயாளன். (வயது 58).
இவர் சொந்த வேலையாக திருச்சிக்கு வந்துள்ளார்.

திருச்சியில் குமரன் நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் டவுன் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது இவரது பையில் இருந்த பணத்தை பிக்பாக்கெட் அடித்து விட்டனர்.
. இது குறித்து அவர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிந்து இது தொடர்பாக திருச்சி மாவட்டம், தொட்டியம் அரசலூரைச் சேர்ந்த விஜயராகவன் என்ற வாலிபரை கைது செய்து, அவரிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.