Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குழந்தை வெடி வெடித்ததால் மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது.பெண்கள் இருவர் மீது வழக்கு.

0

'- Advertisement -

அரியமங்கலத்தில் குழந்தை வெடி வெடித்ததால் மூதாட்டி மீது தாக்குதல்.

அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மனைவி லட்சுமி (வயது 65).

இவரது வீட்டு குழந்தை அப்பகுதியில் வீட்டு அருகே வெடி வெடித்து உள்ளனர் .

Suresh

அப்போது ஏற்பட்ட தகராறில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், அவரது மனைவி தமிழரசி, கார்த்திக்கின் சகோதரி அகிலா ஆகியோர் லட்சுமியை அரிவாள் மற்றும் கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லட்சுமி அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில்ஆரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக்கை கைது செய்தனர்.

மேலும் தமிழரசி, அகிலா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.