Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு சார்பில் ஊழக்கு ஏதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு.

திருச்சியில் ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு சார்பில் ஊழக்கு ஏதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு.

0

திருச்சி ஊழல் ஒழிப்புப்போர் கூட்டமைப்பு சார்பில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி.பி ராமேஷ் தலைமை தாங்கினார்.

பேராசிரியர் ப.ரவி சேகர் முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் சலாவுதின் வரவேற்ப்பு உரை ஆற்றினார்.

இதில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்து உரை வழங்கினார்.

ஊழலுக்கு எதிரான கருத்தரங்கில் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம். சந்திரசேகரன், பேராசிரியர் டாக்டர் சி. அருள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் டாக்டர் பி.ரவி முத்துராஜா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

முடிவில் அமைப்பாளர் எஸ். சந்தான கிருஷணன் நன்றி கூறினார்.

ஊழக்கு எதிராக அனைவரும் உறுதி மொழி ஏற்றினார்கள் வழக்கறிஞர் ஜெயகுமார், ஆனந்தராஜ்,கார்த்திக் அன்புராஜ், சகாபுதின், ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.