மக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை தந்து பணியாற்றுவேன்: திருச்சி புதிய மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற முஜிபுர் ரகுமான்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் பொறுப்பேற்றார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக பணியாற்றிய ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், அவர்களை பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (14.07.2021) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொறுப்பேற்றுக்கொண்ட ஆணையர் திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும்,
பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என்று பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.