Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தின சோலை அறக்கட்டளையின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள், அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

0

தின சேவை அறக்கட்டளை வாயிலாக covid 19 பெரும் தோற்று காலகட்டத்தில்

திருச்சி மாவட்டத்தில் உள்ள தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தினசேவை அறக்கட்டளை சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது .

இச்சேவையை தமிழகநகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் K. N. நேரு துவங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் .

நிகழ்வில் தின சேவை அறக்கட்டளை நிறுவனர் தலைவர் K. சிவப்பிரகாசம் தன்னார்வமாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகி கதிரேசன், மற்றும் குமரவேல், சந்திரசேகர், விஜயா, சேகர், தமயந்தி, பவித்ரா, ரேவதி, பஷீரா, அமினா, முஸ்தபா, அப்துல் ரகுமான், ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிவாரண பொருட்களை திருச்சியில் சோழமதேவி, திருவெறும்பூர், மணிகன்டம் பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது இருப்பிடத்திற்கே சென்று பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.