Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பிடி வாங்கித் தர மறுத்த வாலிபருக்கு கத்திக்குத்து.

0

திருச்சியில்
பீடி வாங்கி தர மறுத்த வாலிபருக்கு கத்திக்குத்து.

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அன்சாரி இவரது மகன் அபுதாகிர் (வயது 19) இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த வாரம் தனது நண்பர்களுடன் கோட்டை ரயில்வே காலனியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார்.

அப்போது அங்கு வந்த திருச்சி ஜீவா நகரைச் சேர்ந்த துரை மற்றும் சூர்யா ஆகிய இருவரும் அவரிடம் பீடி வாங்கி வருமாறு கூறினார். இதற்கு அபுதாஹீர் மறுப்பு தெரிவித்தார் இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு வந்த அவரின் சகோதரர் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று அபுதாகிரை கண்ட துரை மற்றும் சூரியா மீண்டும் தகராறில் ஈடுபட்டு கத்தியால் நெற்றியில் கிழித்தனர். இதனால் அபுதாகிருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த
புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.