தமிழகம் முழுவதும் தொடர் மழையால் அழிந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், மற்ற பயிர்களுக்கு ரூ. 20,000 வழங்க கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நல்ல புத்தியிணை அளிக்கக்கோரி மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தங்களையும் மனு கொடுக்கும் போராட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செயது மாலையில் விடுவித்தனர்.