Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலை பகுதியில் திமுக கிராம சபை கூட்டம் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

0

'- Advertisement -

திமுக தலைவர் அவர்களின் ஆணைப்படி “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் மாநிலம் தோறும் கிராம சபை கூட்டம் நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்டம் பொன்மலை பகுதி 30வது வட்டம் சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கிராம சபை கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. தலைமையிலும்,

Suresh

பகுதி செயலாளர் தர்மராஜ் முன்னிலையிலும் மற்றும் சிறப்பு அழைப்பாளராக கழகப் பேச்சாளர் தமிழன் பிரசன்னா , 30 வது வட்ட கழக செயலாளர் தமிழ்மணி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள்,வட்டக் கழக பிரதிநிதிகள் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு “அதிமுகவை நிராகரிப்போம்” என்று “கோஷங்களை எழுப்பி”
“துண்டுப் பிரசுரங்களை” வினியோகித்து “கையெழுத்து இயக்கம்” நடத்தி தங்களது எதிர்ப்பை 30வட்ட கிராம சபைக்கூட்டம் மூலம் பதிவு செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.