திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி SRMU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி SRMU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
வேளாண் திருத்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம்.
எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில். வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரியும், தொழிலாளர் நல சட்டங்கள் திருத்தப்படுவது, ரயில்களை தனியார் மயமாக்குவது, ஊட்டி மலை ரயில்லை தனியாருக்கு மாதம் 4.75 லட்சத்திற்க்கு தாரைவார்த்து ரெயில்வே பணியாளர்களின் வேலை பறிப்பு, 7 லட்சம் காலி இடங்களை நிரப்பாமல் பல்லாவரம் ரயில்வே தொழிலாளர்கள் அனைவரையும் கூலி தொழிலாளர்களாக மாற்றுவது உள்ளிட்டவற்றை கண்டித்து இந்த போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பபப்பட்டன.
மதிய உணவு இடைவேளையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.