எல்.முருகன் கைது எதிரொலி, திருச்சியில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது.
எல்.முருகன் கைது எதிரொலி, திருச்சியில் மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது.
தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் எல். முருகன் கைது.
திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜகவினரும் கைது.
திருத்தணியில் அரசின் தடையை மீறி பாஜக வேல் யாத்திரை செல்ல முயற்சி.
வேல் யாத்திரைக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு. இதனை மீறி வேல் யாத்திரை மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் முருகன் கைது செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவல்துறை தடையை மீறி மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் பார்த்திபன், மாநில நிர்வாகிகள் இல. கண்ணன் மண்டல செயலாளர் ராஜசேகரன், மாவட்ட வர்த்தக அணி பிரிவு தலைவர் முரளிதரன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறை வைக்கப்பட்டனர்.