சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை..நகரின் பல சாலைகளில் வெள்ளம்
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் அறிகுறியாக, சென்னையில் நேற்று மேகமூட்டமாகவும் சில நேரங்களில் லேசான சாரல் மழையும் பெய்தது.
இந்நிலையில், நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. விட்டு விட்டு சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இரவில் பல மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியிருந்தது. சுரங்கப்பாதை , மெரீனா கடற்கரை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கியது. இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.