பாலியல் தொழில் நடத்தியவர்கள் மீது கே.கே .நகர் காவல் நிலைய ஆய்வாளர் அதிரடி ரெய்டு
பாலியல் தொழில் நடத்தியவர்கள் மீது கே.கே .நகர் காவல் நிலைய ஆய்வாளர் அதிரடி ரெய்டு
சென்னையில் பாலியல் தொழில் நடத்திய நபர்களை குறி வைத்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 பெண்களை மீட்டனர்.
சென்னை முழுவதும் அப்பாவி பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் நடத்திவரும் கும்பலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
அதன் பேரில், கே.கே நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின்படி விருகம்பாக்கம், ஆர்காட் சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திவந்த நளினி (25), கும்பகோணம் மற்றும் மாரிமுத்து (29), அமைந்தகரை ஆகிய இரு நபர்களை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து மூன்று பெண்களை மீட்டனர். மேலும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளராக மகேஷ் குமாரின் அதிரடி நடவடிக்கைகளால் சென்னையில் குற்றவாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.