மத்திய அரசு வேளாண்மை சட்டத்தை எதிர்த்து திருச்சி கீழ் கல்கண்டார் கோட்டையில் திமுக பகுதி சார்பில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசு வேளாண்மை சட்டத்தை எதிர்த்து திருச்சி கீழ் கல்கண்டார் கோட்டையில் திமுக பகுதி சார்பில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி தெற்கு மாவட்டத்தில் பொன்மலைப்பகுதி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினர் பங்கேற்பு.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், மத்திய – மாநில அரசுகளின் வஞ்சத்தை அம்பலப்படுத்த, விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்காக மத்திய அரசை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவு அளித்துள்ள மாநில எடப்பாடி அரசைக் கண்டித்தும் திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் தி.மு.க தலைமையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
பொன்மலை பகுதி சார்பில் நடைப்பெற்ற, கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, கலந்து கொண்டு மத்திய – மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி, பொருள் வர்த்தக மசோதா, விளை பொருளுக்கு உரிய விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டு நுகர்வோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானதும் – வேளாண்மை முன்னேற்றத்திற்குப் பின்னடைவைத் தரக்கூடியதும் – கூட்டாட்சித் தத்துவத்திற்குப் புறம்பானதுமான மூன்று சட்டங்களை மக்களிடத்தில் விளக்கி உரையாற்றினார் கண்டன கூட்டத்திற்கு பொன்மலை பகுதி திமுக செயலாளர். கொட்டப்பட்டு தர்மராஜ் முன்னிலை வகித்தார் .உடன் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லீலா வேலு, முன்னாள் கவுன்சிலர் உஷாராணி , காங்கிரஸ் முத்து,மதிமுக , புலவர் தியாகராஜன் , ஜெயசீலன் சி.பி.ஜ. சுரேஷ்,சுந்தர் ராஜ், சி.பி.எம் – கார்த்திகேயன், வி.சி.க – , முத்து, சிறுத்தை பொன்னுசாமி,, இ. யூ.மு.லீ.க் – ஏர்போர்ட் பாருக் ,, நசீர் அகமது , ம.ம.க – முகமது கோரி, கொ.நா.ம.தே.க – சுந்தர் ஐ.ஜெ.கே – பி.ஆர்.சுரேஷ்,, தி. க – மணிமாறன், அ. இ.பா.பி – பூரண குமார்.
விவசாய சங்கத்தினர், தி.மு.க பகுதி செயல்வீரர்கள் மற்றும் தோழமைக் கட்சியை சார்ந்தவர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.