திருச்சியில் ரூ.330 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடைத் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
திருச்சியில் ரூ.330 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடைத் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் .
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், கிழக்கு சட்டமன்ற தொகுதி, 38 வது வார்டு கே.கே. நகர் பகுதியில், ரூ.330 கோடி செலவில், நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
பின் ,அவர்களுக்கு திட்டபணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்,
இந்நிகழ்ச்சியில் கருமண்டபம் பத்மநாதன் , பகுதி செயலாளர் ஞானசேகர், மனோகரன்,முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஆவின் தலைவர் கார்த்திகேயன்,அமராவதி தலைவர் ஏர்போர்ட் விஜி, வெல்லமண்டி ஜவகர்லால் நேரு ஜாக்லின், சிந்தை முத்துக்குமார், அக்தர் பெருமாள் மற்றும் கழக நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.