Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முதல்வரை சந்தித்து துக்கம் விசாரித்தார் ஸ்டாலின் 

முதல்வரை சந்தித்து துக்கம் விசாரித்தார் ஸ்டாலின்  

0

*முதல்வரை சந்தித்து துக்கம் விசாரித்தார் ஸ்டாலின்*

       தாயார் மறைவிற்காக சேலத்தில் தங்கியிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வாரகாலத்திற்கு பின்னர் இன்று சென்னை திரும்பினார்.  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்திற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயார் தவுசாயம்மாளின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் முதல்வரிடம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் வந்திருந்தனர்.  இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கடந்த வாரம் முதல்வர் தாயார் தவுசாயம்மாள் மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதி சடங்கு சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.