காவிரி,கொள்ளிட கரையோரங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தல்.
கடந்த நான்கு தினங்களாக காவிரி கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு
1,95,000 கன அடியாக உள்ளது.
இதில்
காவிரி ஆற்றில் வினாடிக்கு
62, 000 கனஅடி நீரும்
கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1,33,000 கனஅடி நீரும் தற்போது திறக்கப்பட்டு வருகிறது.
எனவே
காவிரி,
கொள்ளிட ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்துள்ளது.
மேலும் பொதுமக்கள் ஆறுகளில் இறங்கி குளிக்கவோ, மீன்பிடிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாதெனவும் எச்சரித்துள்ளது.

