திருச்சியில் வீட்டின் உள் விழுந்து மூதாட்டி பரிதாப சாவு
திருச்சி சின்ன கடை வீதி கோவிந்தன் பிள்ளை ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி நவநீதம்( வயது 95 ).இவர் சம்பவத்தன்று எதிர்பாராதவிதமாக தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் இருந்து தவறி கீழே விழுந்தார் .
இதில் காயமடைந்த அவரை மீட்டு உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.