திருச்சியில் எலி மருந்து சாப்பிட்டு நர்சிங் மாணவி தற்கொலை.
திருச்சி வடக்கு தாரநல்லூர் கே.பி.எஸ். கோனார் நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் தீபிகா (வயது 17). இவர் தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் நர்சிங் படித்து வந்தார்.
இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விரக்தியடைந்த அவர் எலி மருந்து சாப்பிட்டு உள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் தீபிகாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .
ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.