திருவெறும்பூர் அருகே காட்டூர் எல்லகுடி, எல்.ஐ.சி. நகர் 1 ம் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 74 ). கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவரான இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தனது அறையில் உள்ள மின்விசிறி ஊக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பழனிச்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.