திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ளது தெற்கு இருங்கலூர் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் சவரிமுத்து மகன் பிலவேந்திரன் (வயது 56)
விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வைத்து பராமரித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது ஆடுகளுக்கு உணவுக்காக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சாலையோரத்தில் உள்ள மரத்தில் ஏறி அதன் கிளைகளை வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தின் மேலே சென்ற மின்சார கம்பி மீது வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பிலவேந்திரன் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் போலீசார் பிலவேந்திரன் உடலை கைப்பற்றி
உடல் உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.