Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திறந்தவெளி சாக்கடையில் பாதாள சாக்கடை நீர், நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை.

0

'- Advertisement -

திறந்தவெளி சாக்கடையில் பாதாள சாக்கடை நீர்.நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி ?மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;


திருச்சி மாநகராட்சி 26 வது வார்டு உள்ள இக்பால் காலனி பகுதியில் சஞ்சய் அப்பார்ட்மெண்ட், அருகில் உள்ள பாதாள சாக்கடை மூடி பழுதடைந்து. பலமுறை பணி செய்தும், தற்பொழுது நிலை சரி இல்லை. அந்த சரி இல்லாத பகுதிகளில் கட்டைவைத்து, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. என்பதனையும்,

அதேபோல் பாதாள சாக்கடை கழிவு நீர் திறந்த வெளிசாக்கடையில் கலப்பதால் அந்த கழிவு நீர் உய்யக் கொண்டான் ஆறு வரை சென்றடைய உள்ளதால், மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற, கருத்தில் கொண்டு உடனடியாக. கழிவு நீர் சாக்கடைகள் விடுவதை தடுக்க வேண்டி.

 

மக்கள் சக்தி இயக்கம் மற்றும் மக்கள் முன்னேற்ற பொது நல சங்க முடுக்குப்பட்டி. இதற்கான பணிகளை துரிதப்படுத்தி செய்ய வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறோம். வினர் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.