Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோவை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பாஜக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

0

திருச்சியில் பா.ஜ.க .மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்த கோவை பள்ளி மாணவியின் பெற்றோருக்கு நீதி வழங்கக் கோரியும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மெத்தனப்போக்கை காட்டும் ஆளும் திமுக அரசை கண்டித்தும்,

கோவை பள்ளி மாணவி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரியும்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட மகளிர் அணி தலைவர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார்.

கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்

மகளிர் அணி மாநில செயலாளர் லீலா சிவக்குமார்,  துணைத்தலைவி உமா, பொதுச்செயலாளர் துர்கா தேவி,  பொருளாளர் மலர்கொடி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில்
செயலாளர் வேளாங்கண்ணி, ஹேமாமாலினி ,தனலட்சுமி , மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் பார்த்திபன், கௌதம் நாகராஜன், கள்ளிக்குடி ராஜேந்திரன்,, கணேஷ், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீராம், சந்தோஷ் குமார், மண்டல் தலைவர் சதீஷ் குமார் மல்லி செல்வம் மற்றும் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.