நாளை வெள்ளிக்கிழமை (03.07.2026) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாயில் அப்பல்லோ மருத்துவமனை, பால்பண்ணை அருகில் 600 எம்.எம் DI விட்டமுள்ள உந்துக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால் இப்பணியினை செய்வனே செய்திடும் பொருட்டு மாநகராட்சியால் இன்று 02.07.2026 அன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது . கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய 9 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு

நாளை வெள்ளிக்கிழமை03.07.2026 ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது.
மறுநாள் 04.07.2026 சனிக்கிழமை அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

