திருச்சி காந்தி மார்க்கெட்டி பகுதியில்லாட்டரி சீட்டுகள் விற்ற மூதாட்டி கைது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பொது கழிப்பறை அருகே வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தாரநல்லூர் காமராஜ் நகரைச் சேர்ந்த பழனியம்மாள் (வயது 60) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்றதாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய கிடைத்தின் பேரில் போலீசார் பழனியம்மாளை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லாட்டரி சீட்டுகள் மற்றும் 400 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

