திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் பள்ளியில் +2 தேர்வில் முதல் மாணவியாக வந்த மதுஸ்ரீக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்
திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணியாற்றும் ரெங்கராஜ் – ரூபாமணி அவர்களின் மகள் மதுஸ்ரீ நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் மற்றும் உயிரியலில் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து மொத்தம் 593 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவரின் சாதனையை கெளரவிக்கும் விதமாக செல்லம்மாள் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவி R.மதுஸ்ரீயை பாராட்டி பரிசு பொருட்களை வழங்கி கெளரவித்து உள்ளனர்.
சாதனை மாணவி மதுஸ்ரீ தான் மருத்துவ துறையில் இதே போன்று சாதனை புரிந்து மருத்துவராக நம் நாட்டிற்காக சேவையாற்றுவேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். மாணவி R.மதுஸ்ரீயின் சாதனை தொடர பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் …

