Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரம்ஜான் தொழுகை.ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

0

'- Advertisement -

திருச்சியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம். ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Ad banner

இஸ்லாமியரின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை, இன்று தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது.

ஒரு மாத கால புனித ரமலான் நோன்பை நிறைவு செய்யும் விதமாக, ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மசூதிகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டது.

 

TVK ad

திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரக்கடை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்  ரம்ஜான் தொழுகை நடைபெற்றது.

இதில் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என இஸ்லாமிய பெருமக்கள் ஏராளமானோர் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகைக்கு பின்னர் மக்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.