அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட . அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை.
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 57 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில், திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில்.. பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் திருவுருவ படத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமாரின் வழிகாட்டுதல்படி பேரறிஞர் பெருந்தகை அண்ணா திருவுருபடத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் TNT.சூப்பர் நடேசன், பொன்மலை பகுதி செயலாளர் M .பாலசுப்பிரமணியம், அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி, காட்டூர் பகுதி செயலாளர் முருகானந்தம், துவாக்குடி நகர செயலாளர் S.P.பாண்டியன் லால்குடி நகரக் செயலாளர் பொன்னி சேகர், பூவாளூர் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சூரியூர் ராஜாமணிகண்டன்,
அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக் மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி மேரி, ஜார்ஜ் பொதுக்குழு உறுப்பினர் சாந்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

