நியாயம் வென்றது. அதிமுக மாவட்ட செயலாளர் குமார் மற்றும் ஒன்றிய செயலாளர் கார்த்திக் கண்டனத்திற்கு தீர்வு .
நியாயம் வென்றது.
அதிமுக மாவட்ட செயலாளர்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர் கார்த்திக் கண்டனத்திற்கு தீர்வு கிடைத்தது உள்ளது.

திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலித் எழில்மலை. அவர்களின் 2003-2004 ஆம் ஆண்டு ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டு நிதியில் கட்டப்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேங்கூர் ஊராட்சியில் அமைந்துள்ள சீரணி அரங்கத்தை தற்போது ஸ்டிக்கர் திராவிட மாடல் அரசு கட்டிடம் புதுப்பிக்கப் பட்டதில் மறைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பெயரை அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அவர்களின் வழிக் காட்டுதல் படி அதிமுக

அன்று பெயர் அழிக்கப்பட்டு இருந்த படம்
கண்டனத்துக்கு பின் எழுதப்பட்டது
திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் SKD கார்த்திக் சார்பில் போஸ்டர்கள் அடித்து தெரிவித்த கண்டனத்தை முன்னிட்டு மீண்டும் சீரணி அரங்கம் கட்டிடத்தில் அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலித் எழில்மலை அவர்களின் பெயர் பொன் எழுத்துக்களால் எழுத்துப்பட்டு உள்ளது.


இத்தகைய நியாயமான கோரிக்கைக்கும் கண்டனத்திற்கும் பின் மீண்டும் பெயரை எழுதிய திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அதிகாரிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் மாவட்ட செயலாளர் குமார் மற்றும் ஒன்றிய செயலாளர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

