Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் உள்ள பகுதியில் விபரம்….

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் இன்று (டிசம்பர் 23, செவ்வாய்க்கிழமை) மின் தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 23, செவ்வாய்க்கிழமை), மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் எவை என மின்வாரியம் அறிவித்துள்ளது.

திருச்சி மின் தடைசெய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் :

திருச்சி மாவட்டத்தில், வாழவந்தான்கோட்டை, தாத்தையங்கார்பேட்டை, மேல கொத்தம்பட்டி, அம்மாபேட்டை, பாலகிருஷ்ணம்பட்டி, நீதிமன்றம் மற்றும் தங்கநகர் ஆகிய துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில், இன்று (டிசம்பர் 23, செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் மேற்கண்ட துணை நிலையங்களுக்கு உட்பட்ட எந்தெந்த பகுதிகளில் நாளை மின்சார சப்ளை இருக்காது என விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வாழவந்தான் கோட்டை (திருவெறும்பூர் வட்டம்) :

ஐயம்பட்டி, தேவராயனேரி, குமரேசபுரம், எழில் நகர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் காலனி, மேலமங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே நகர், சிட்கோ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

தாத்தையங்கார்பேட்டை (முசிறி வட்டம்):

மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பட்டியங்காடு பட்டி , கலிங்கப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

மேல கொத்தம்பட்டி (முசிறி வட்டம்):

உள்ளூர், மங்கலம், கண்ணனூர், கண்ணனூர்பாளையம், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டானம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம்பாளையம், வடக்குவெளி, சாலாம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

 

அம்மாபேட்டை (மணிகண்டம் வட்டம்)

 

தாயனுார்சந்தை, கல்குடி, இணாம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி நகர், சமத்துவபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

 

பாலகிருஷ்ணம்பட்டி (துறையூர் வட்டம்):

 

எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

 

நீதிமன்றம் (திருச்சி நகரம்)

 

புதூர், பீமா நகர், நீதிமன்றம், லாசன்ஸ் சாலை, மார்சிங் பேட்டை, செங்குலம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி நகர், வில்லியம்ஸ் சாலை, அரசு மருத்துவமனை, ஒய்.டபிள்யூ.சி.ஏ, கமிஷனர் அலுவலகம், முத்துராஜா தெரு, நடுவைக்கோல்கார வீதி, பஜார், பாளையம் பஜார், பட்டாபிராமன் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

தங்கநகர் (திருச்சி நகரம்) :

எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடகுபட்டியழகாபுரி, ஒக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மின் நுகர்வோர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.