Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாமி கும்பிட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற பக்தர் திடீர் மாயம் .

0

'- Advertisement -

சாமி கும்பிட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற பக்தர் திடீர் மாயம் .

திருச்சி கருமண்டபம் ஆண்டாள் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 45) இவர் கடந்த 9 ந் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி கும்பிட சென்றார். பிறகு சாமி கும்பிட்டு விட்டு தெற்கு வாசல் வழியாக கோவிலில் இருந்து வெளியே வந்து உள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரை

பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது உறவினர் பிரசாத் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கார்த்தியை தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.