அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” என்ன உறுதிமொழி ஏற்பு .
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட
செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவிப்பு

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் இன்று 15.09.2025 பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை, முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து.

தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” என்ற தலைப்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள உறுப்பினர்களை ஒன்றிணைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநிலங்கள் அவை உறுப்பினர் கவிஞர் சல்மா மாநகர செயலாளர்
மு. மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் சபியுல்லா பகுதிக்கழகச் செயலாளர் மோகன். மாநில, மாவட்ட மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

