திருச்சியில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் தற்கொலை.

தஞ்சை மாவட்டம் கீழவாசல் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது55) மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்.

இந்த நிலையில் திருச்சி, எடமலை பட்டிபுதூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கடந்த நான்கு நாட்களாக குடியில் இருந்து விடுபட சிகிச்சை பெற்று வந்தார். மன உளைச்சலில் இருந்து வந்த குமார் நேற்று அவரது உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து எடமலைப்பட்டி பதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

