திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்த ரூ 18.41 கோடியில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பிரம்மாண்ட கட்டிடம் முழு விவரம்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில்
ரூ 18.41 கோடியில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பிரம்மாண்ட கட்டிடம்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் ரூபாய் 18.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள்.
திருச்சி மாவட்டத்தில் 1932 ஆம் ஆண்டு முதல் எடமலைப்பட்டி புதூர் நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு கொண்டிருந்த பள்ளி 18.07.2017 அன்று முதல் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டபோது மாணவர்கள் எண்ணிக்கை 125 ஆகும். தற்போது 2025-26 ஆம் கல்வியாண்டு 20 ஆசிரியர்கள். 841 மாணவர்கள் அப்பள்ளியில் பயின்று வருகிறார்கள். இப்பள்ளியானது தொடக்கப்பள்ளியுடன் இணைந்து ஒரே வளாகத்தில் சுமார் 1500 க்கு மேற்பட்ட மாணவ /மாணவிகளுடன் செயல்பட்டு வருகிறது.
திருச்சி மாநகராட்சி கல்வி நிதியின் மூலம் ரூ.18.41 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் 35 வகுப்பறைகளுடன், ஒரு தலைமை ஆசிரியர் அறை, 2 ஆசிரியர்கள் அறை . 1 உயர் தொழிநுட்ப கணினி ஆய்வகம் மற்றும் 1 அறிவியல் ஆய்வகமும் உள்ளன. மேலும் இத்துடன் தனியாக அனைத்து வசதிகளுடன் கூடிய சமையல் கூடமும் உள்ளது.
இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் சாய்கிரிஸ் என்ற மாணவன் கலையரசன் விருது பெற்று ஜப்பானுக்கும் . சிறார் திரைப்படம் மன்றத்தின் மூலம் குறும்படத்திற்கான சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுக்கப்பட்ட மித்ரா என்ற மாணவி ஹாங்காங்க்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் சுற்றுப் பயணம் சென்று வந்துள்ளனர் என்பது இப்பள்ளியின் சிறப்புக்குறிய நிகழ்வாகும்.
மேலும் 2025-26 ஆம் கல்வியாண்டில் இப்பள்ளி பசுமைப்பள்ளிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ. 20,000,00/- (ரூபாய் இருபது லட்சம் மட்டும் ) நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
விழாவிற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு,
கலெக்டர் பிரதீப் குமார் மாநகராட்சி ஆணையர் சரவணன்,துணை மேயர் திவ்யா தனக்கோடி,
மத்திய மாவட்ட திமுக செயலாளர், மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில்,
,முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் திருவரங்கம் ஆனந்த்,
மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், பொருளாளர் துரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல்,
பகுதி செயலாளர்கள் கவுன்சிலர் கமால் முஸ்தபா, மோகன்தாஸ், கவுன்சிலர் நாகராஜ்,கவுன்சிலர் காஜாமலை விஜய்,ராம்குமார்,பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம் , புத்தூர் தர்மராஜ்,மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர் சிங்காரம்,வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,ஆண்டாள் ராம்குமார்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன், வழக்கறிஞர் அந்தோணி, உத்தமர் சீலி ராஜேந்திரன்,
மாவட்ட பிரதிநிதிகள் வழக்கறிஞர் மணிவண்ண பாரதி,சோழன் சம்பத்,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ்,பி.ஆர்.பி .பாலசுப்ரமணியன்,
வாமடம் சுரேஷ்,தனசேகர்,கவுன்சிலர்கள் மண்டி சேகர், கவிதா செல்வம், விஜயா ஜெயராஜ், ராமதாஸ், புஷ்பராஜ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,நிர்வாகிகள் தென்னூர் அபூர்வமாணி ,
எம் ஆர் எஸ் குமார்,ராஜ்குமார் அயூப்கான்,சர்ச்சில்,ரஜினி கிங் மற்றும் ஆசிரியர்கள்,பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கவுன்சிலரும் மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம், நன்றி கூறினார்.