Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: எடமலைப்பட்டி புதூரில் அரியருக்கு படித்து வந்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை.

0

'- Advertisement -

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அரியருக்கு படித்து வந்த
வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை.

போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Suresh

திருச்சி திருவானைக்காவல் கே.கே. சாலை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன் குமார். இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்பொழுது அவர் 2 பாடத்தில் அரியர் வைத்து விட்டார். இந்நிலையில் அந்த தேர்வை எழுதுவதற்காக நவீன்குமார் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள அரசு காலனியில் ஒரு வீட்டில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில்
நேற்று நவீன்குமார் தங்கியிருந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனை பார்த்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு நந்தகுமார் மின்விசறியில் தூக்கிட்டு பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

இதையடுத்து தகவல் அறிந்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நவீன் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.