Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வேலையில்லா பட்டதாரி தற்கொலை. மனைவி மகள் தவிப்பு.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி அம்மா மண்டபத்தில் வேலையில்லாத விரக்தியில் பட்டதாரி கணவன் தற்கொலை.

குழந்தையுடன் மனைவி வெளியில் சென்ற போது நடந்த சோக சம்பவம்.

TVK ad

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத் தெருவை சேர்ந்தவர் குருகிருஷ்ணன். (வயது 39) பட்டதாரி வாலிபர் .

இவரது மனைவி கீர்த்தனா (வயது 38) திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
குரு கிருஷ்ணனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மன அழுத்தத்தில் இருந்து உள்ளார் .

இந்நிலையில் அவரது மனைவி தனது குழந்தையுடன் வெளியில் சென்று இருந்தார் .

மனைவி இல்லாத நேரத்தில் வீட்டில் குரு கிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் வீடு திரும்பிய மனைவி தூக்கில் தொங்கிய கணவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மனைவி கீர்த்தனா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .
இப்புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனை இழந்து மனைவியும், தந்தை இழந்த மகளும் தவித்து வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.