சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டி சீரடி சாய்பாபா கோயிலின் கலை கட்டிடக்கலை மற்றும் தெய்வீகத்தன்மை ஆகியவற்றின் மிகச்சிறந்த கலவையான இதுவரை உருவாக்கப்படாத மிகச்சிறந்த கோயில் கட்டுமானங்களாக குறிக்கப்படும்.
அதன் அற்புதமான கோயில்கள் ஆராயாமல் தென்னிந்தியாவிற்கு செல்வது முழுமை அடையாது தென்னிந்தியாவில் உள்ள மற்ற அனைத்து மாநிலங்களுக்கு இடையில் இந்தியாவின் மிகச்சிறந்த கோயில்கள் கட்டிடக்கலையை காண்பிக்கும் பல கோயில்களுடன் தமிழகம் ஆதிக்கம் செலுத்துகிறது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள அக்கரைப்பட்டியில் தென் சீரடி சாய்பாபா கோயில் 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் சாய்பாபா கோயில் தென் இந்தியாவில் சீரடி சாய்பாபாவுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும் .
2020 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மீக தலைவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டு அருளிணர்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாய்பாபா கோயில் குடும்ப நிறுவனங்களின் தலைவர் கே. சந்திரமோகன் நிர்வாக அறக்காவலர்களாக கொண்டு அறக்கட்டங்களால் திட்டமிட்டு வடிவமைத்து தரப்பட்டுள்ளது.
பாபாவின் 106 வது மகா சமாதி தினம் விஜயதசமி விழாவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை சாய்பாபாவிற்காக நடைபெற்ற விசேஷங்களில் மக்கள் கூட்டம் பெரு வெள்ளமாக வருகை புரிந்திருந்தனர்.
அவர்களுக்கு மகா அன்னதானம் கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டது மற்றும் சினிமா பின்னணி பாடகர் வேல்முருகன் தலைமையில் சாய்பாபாவின் புகழ் ஒழிக்க மேளதாளங்களுடன் பாடல்கள் இசைக்கப்பட்டன இதை கேட்ட பொதுமக்கள் பக்தி வெள்ளத்தில் நடனமாடி மகிழ்ந்தனர் . சினிமா பின்னாடி பாடகர் வேல்முருகன் கூறியதாவது:-
அனைத்து மக்களும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சாய்பாபா கோயில்கள் இருந்தபோதிலும் பொதுவாக மக்கள் மனதில் சீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்வது விருப்பம் ஆனால் மக்கள் வெகு தூரம் சென்று சாய்பாபா தரிசனம் செய்வதற்கு பதிலாக திருச்சி தென் சீரடி சாய்பாபா கோயிலுக்கு வருகை தருவதன் மூலமாக நமது அருகாமையில் தென் சீரடி சாய்பாபா உடனடியாக தரிசிக்க முடியும் என்றும் எனது வாழ்வில் சாய்பாபா அவர்களை தரிசித்த பின்பு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் சாய்பாபா பற்றி உணர்வு பூர்வமாக தாமே பாடல்கள் எழுதி .பாடப்போவதாக போவதாககூறினார் வேல்முருகன்
பிரம்மாண்டமான சாய்பாபா கோயிலிலில் நேற்று மகா சமாதி தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மகா அன்னதான விழாவில் கலந்து கொண்டு சாய்பாபாவின் தரிசனம் செய்தனர்