
திருச்சி கல்லூரி உதவி பேராசிரியையின்
கணவர் -குழந்தை மாயம்.
திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர் கிருஷ்ணா தெரு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்.
இவர் திருச்சி ஜங்ஷன் பகுதியில் சிக்கன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜனரஞ்சனி (வயது 30 )இவர் குண்டூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியை யாக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதியருக்கு ஐந்து வயதில் கிருத்திக் கேசவன் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் பார்த்திபன் மகனை அழைத்துக் கொண்டு அங்குள்ள பள்ளிக்கு சென்றார், பின்னர் கணவர் மற்றும் குழந்தை வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தோம் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ஜனரஞ்சனி அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார்
புகாரின் பெயரில் இன்ஸ்பெக்டர் செல்வமலர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

