Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ளக்காதலை துண்டித்ததால் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் பெண்ணை ஓட ஓட விரட்டி கொன்ற வாலிபர் கைது .

0

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு பெண்ணுக்கும், இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார். உயிருக்கு பயந்து அந்த பெண் ஓட முயற்சித்த போது, அந்த வாலிபர் விடாமல் துரத்திச் சென்று அந்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.

சிறுகாம்பூர் பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியான ரவிக்குமார் என்பவரது மனைவி சுமதி (வயது 42). கடந்த சில மாதங்களாக ரவிக்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், அவரது மனைவி சுமதி திருச்சியில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது மாரிமுத்து (வயது 30) என்பவருடன் சுமதிக்கு செல்போன் மூலமாக தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியதை அடுத்து, சுமதியும், மாரிமுத்துவும் பல்வேறு இடங்களுக்கும் சுற்றித்திரிந்து உள்ளனர். இது தொடர்பாக சுமதியின் உறவினர்களுக்கு தெரிய வந்ததால், அவர்கள் சுமதியை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இதையடுத்து மாரிமுத்து உடனான தொடர்பை துண்டித்துக் கொள்ள முடிவு செய்த சுமதி, இது தொடர்பாக அவரிடம் கூறிவிட்டு, அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். மேலும் மாரிமுத்துவின் செல்போன் அழைப்புகளையும் அவர் ஏற்க மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த மாரிமுத்து, நேற்று காலை அவர் வழக்கமாக வரும் பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருந்து, சுமதி உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுமதியை கொலை செய்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மாரிமுத்துவை கைது செய்துள்ள போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.