Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சர்வதேச சிலம்பாட்டம் போட்டியில் முதலிடம் பெற்று திருச்சி திரும்பிய யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்தில் பயிற்சி பெற்ற 3 மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு.

0

'- Advertisement -

 

தாய்லாந்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாணவர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு ஜல்லிக்கட்டு போட்டி போல் சிலம்பத்தை ஊக்குவிக்க தமிழக அரசுக்க கோரிக்கை.

சிலம்பம் என்பது ஒரு தமிழர் தற்காப்புக் கலை  மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும்

இன்றைய தலைமுறையில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள்  என்று எந்த பாகுபாடும் இல்லாமல் இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று கொண்டு விளையாடி வருகின்றனர்

திருச்சி மாவட்ட யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிலம்பு பயிற்சி கடந்த நான்கு வருடமாக நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகளிலும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்கள், விருதுகள் பெற்றுள்ளனர். பின் கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் 2 மாணவர்கள் முதலிடம் பிடித்தார்கள். அதன் அடிப்படையில் தாய்லாந்தில் ஜனவரி 26,27 இரண்டு நாட்கள் உலக அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டிகள் நடைபெற்றது ..

இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஸ்ரீலங்கா உள்ளிட்ட 5 நாடுகளைக் கொண்ட வீரர்கள் கலந்து கொண்ட போட்டியில், ஒற்றைக் கம்பம், இரட்டைக் கம்பம், சண்டை பயிற்சி, போன்ற சிலம்பப் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத்  ஜமாத்தில் பயிற்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். முகமது இர்பான், முகமது சல்மான், முகமது ஹர்ஷத், ஆகிய மாணவர்கள் உலகளாவிய சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்து விருதுகளை பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.

இதனை அடுத்து இன்று திருச்சி ரயில்வே நிலையம் வந்த மூன்று மாணவர்களுக்கு சலவை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இது குறித்து யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ரபீக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது :-

தமிழர்களின் அடையாளமாக இருக்கக்கூடிய சிலம்பப் போட்டியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். தற்பொழுது விளையாட்டு நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போல சிலம்ப போட்டிக்கும் முக்கியத்துவம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.